தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....

Tuesday, March 6, 2012

பாடம் அறிந்தவன் நீயே....

அறிவியல் பாடம் அறிந்தவன் நீயே....

காதல் ஆட்சியில் உயிர் கொடுத்து காத்திடுவாயே...
புவியியல் பாடமும் புரிந்தவன் நீயே...
காதல் விதை அள்ளி நெஞ்சில் விதைத்திடு உடனே...
சரித்திரம் சரிவர கற்றவன் நீயே...
காதல் சரித்திரம் எழுதிட சம்மதமளிப்பாய்...
வேதியல் பாடம் வென்றவன் நீயே...


காதல் அணுக்களை குருதியில் கலந்திட வா...
கணக்கினை கரைத்து குடித்தவன் நீயே....
காதலை காதலால் பெருக்கிடு உடனே....
உன் தாய்மொழி தமிழ் மொழி, ஆங்கிலம் பொதுமொழி...
இருமொழி எடுத்து உன் காதலை முன்மொழி...
இத்தனை பாடம் படித்திருந்தாலும் இருக்குது இன்னொரு முக்கிய பாடம்...
எத்தனை பாடம் படித்திருந்தாலும் பருவத்தில் படிக்கனும் காதல் பாடம்...
பிரியமுடன் உஷா நிலா
 

No comments:

Post a Comment