இலை மேல் விழும் பனித்துளி போல் நெஞ்சில்
எழுவது உண்மைக் காதல் இல்லை....
சிப்பியில் விழும் மழைத்துளி போல்
நெஞ்சில் வருவதே உண்மை காதல்...
காதலர் சிந்திய கண்ணீர் துளியால்
கடல் நீர் உப்பாய் மாறியதன்றோ?
கடலில் அலைகள் ஓய்வதில்லை காதலும் அது
போல் இதுவே உண்மை...
காதலும் ஒரு வகை தெய்வீகம் இதை
காத்திட முழங்கும் காதலர் தினம்...
காதலின் முடிவு மரணமென்றால்
அதை மாற்றி காட்டிட சபதம் எடுப்போம்...
முதலில் வெறுக்கும் இதயம் அதன்
முடிவில் இருக்கும் உன் இதயம்.
பிரியமுடன்:உஷா நிலா

No comments:
Post a Comment