பெண்ணும் பொன்னும் ஒன்று
அதை உணர வைத்தோம் இன்று...
மென்மையான பெண்மையிலே மெய்ப்பார்க்கும்
உன் அழகையல்ல அகத்தையே...
அடுப்பூதும் பெண்ணுக்கும் படிப்பெதற்கு
ஆடவன் சொன்னான் அன்று....
புது நூற்றாண்டில் பற்பல புதுமைகள்
படைத்தது பெண்ணினம் இன்று...
உதிரத்தை உரமாக்கி தன் சேய்க்கு
உணவளித்த தாயினமும் இங்கு...
மகளிர் தினத்தில் உயர்ந்து நிற்கின்றது இன்று...
பெண் படைப்புகளோ பலருக்கு
பாடப்புத்தகமானதும் உண்டு ...
பெண் பெருமை கூறும் பல வரலாறுகள்
கண்டு மனிதன் மாறியதும் உண்டு...
பெண்ணினம் பெற்ற பெருமையிலே
அன்னை தெரேசாவும்
அடங்கும் அவனியிலே...
ஆயிரம் அறிஞர்கள் பெண்களிலே...
அரசியல் வென்றதும் உண்டு அகிலத்திலே...
மகளிர் பெருமை கூறும் இந்நாளிலே
மனம் திறந்து வாழ்த்துவோம் மங்கையை...
பிரியமுடன்:உஷா நிலா

No comments:
Post a Comment